Saturday, August 25, 2007

பீட்டர் விட்டு ஆப்பு வாங்குனவங்க!!

நாட்டுல இவிங்க மாதிரியே நிறைய பேரு சுத்துறாங்கப்பா! மனசுல பெரிய எமினம்னு நினைப்பு!!

Friday, August 24, 2007

டி ஆர் இன் காதல் கவிதை!!



நம்ம விஜய டி ஆர் த்ரிஷா கிட்ட காதலை சொன்னார்னா எப்படி இருக்கும்ன்ற ஒரு விபரீத கற்பனை!

அன்பே த்ரிஷா,
நீ தான் என் மோனாலிசா

இழுக்க இழுக்க வர்றது ஜவ்வு!
நான் உன்னை தாறுமாறா பண்ணுறேண்டி லவ்வு!

ரவையை வெச்சு கிண்டுறது உப்புமா!
நீ என்னை கண்டுக்காம இருக்குறது ரொம்ப தப்புமா!

முட்டையை உடைச்சா போடுறது ஆம்லேட்டு
என்னைப் புரிஞ்சுக்கிறதுல எப்பவுமே நீ லேட்டு!

சின்ன பசங்க ஆடுறது கோலி
உங்கப்பன் என்னை பார்த்தான்னா நான் காலி!

ஆற்காட்டில ஃபேமஸ் பிரியாணி
நம்ம காதலுக்கு எவன் குறுக்க வந்தாலும் அவன் மண்டைல நான் அடிப்பேன் பெரிய ஆணி

டி ஆர் னு சொன்னா ஞாபகம் வர்றது தாடி!
நீ கண்டிப்பா வருவ என்னைத்தேடி!

ஆக மொத்தம் நீ தான் என் டிஸ்னி வேர்ல்டு!
நம்ம காதலுக்கு உங்கப்பன் தான் ஆக்ஸா பிளேடு!!

இதுக்கு நம்ம திரிஷா ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி கமெண்டிட்டு போங்க!!



இது என் பதிவை கஷ்டப்பட்டு படிச்சதுக்காக போனஸ்!! :)

போடுங்கப்பா வோட்டு!!

Thursday, August 9, 2007

கூவம் நதிக்கரையிலே

கடைசியா பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சே! உருப்படியா ஒரு பதிவு போட்டா என்னன்னு ஒரு எண்ணம்! மறுபடியும் வரலாறு பத்தியே எழுதலாம்னு முடிவு பண்ணி எதை பத்தி எழுதறதுன்னு யோசிச்சிட்டுருந்தப்ப சென்னை பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணேன். சென்னைன்னு சொன்னவுடனே நம்ம ஞாபகத்துக்கு வர்றது கூவம் தானே!

இதுக்கு மேல ஒரு நதியை அழுக்காக்க முடியாதுன்றதுக்கு சிறந்த உதாரணம் கூவம்! கூவத்தோட வரலாற்றைப் பாத்தோம்னா “எப்படி இருந்த கூவம் இப்படி ஆகிடுச்சுன்னு” கண்டிப்பா வருத்தப்படாம இருக்க மாட்டோம்! இப்ப அது இருக்கற நிலைமையிலே நதிக்குள்ள தான் குதிக்க முடியாது! அதோட வரலாறுலயாவது குதிப்போம் வாங்க!

கூவத்தைப் பத்தி வரலாற்றுக்குறிப்புகள் ஏராளமாக குவிந்து கிடக்குது! 1640 ஆம் ஆண்டு கிளைவ் டே எனும் ஆங்கிலேயத் தளபதியின் கீழ் வந்த வர்த்தகக் குழுவினர் முதன் முதலாக தரையிறங்கிய இடம் கூவம் நதிக்கரைலதான்! வெளி வாணிபத்துக்கு கடல் வழியாகவும், உள் வாணிபத்துக்கு நதி வழியாகவும் பயணம் செய்ய சுலபமா இருக்கும்ன்றத்துக்காக அவங்க தேர்ந்தெடுத்த இடம் கூவம். அவங்க வாணிபத்துக்காக கட்டின கோட்டை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை. இதை பத்தி விரிவா இன்னொரு பதிவுல எழுதியிருக்கேன்.

அப்ப கூவம் நதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்துல ஓடிட்டிருந்துதாம். பின்னாடி கோட்டை விரிவாக்கத்துக்காக அதோட ஒடுபாதையை மாத்தி புதுசா கால்வாய் வெட்டினாங்க! அப்ப ஆரம்பிச்சதுதான்! இன்னிக்கு வரைக்கும் கூவத்துக்கு தொடர்ந்து ஆப்பு வெச்சுகிட்டேதான் இருக்காங்க!

கூவம் ஏன் இப்படி ஆச்சுன்னு பாத்தா ஒரு விநோதமான வேற்றுமை கிடைக்கும்! சென்னையில இருந்து 70 கிமீ தள்ளி கூவம்ன்ற பேர்ல ஒரு கிராமம் இருக்காம். தொடர்ச்சியா 75 குளம் இருக்குற இந்த கிராமத்துல இருக்கிற ஒரு ஏரி தான் கூவத்துக்கு பிறந்த இடம் என்கிறார்கள். முன்னாடி கூவம் நல்லா சீரும் சிறப்புமா ஓடி சென்னையோட தண்ணீர் தாகத்தை தீர்த்துட்டு இருந்துச்சாம்.

ஒரு காலத்துல சென்னையோட தண்ணீர் தேவையை தீர்க்கிறத்துக்காக கூவத்துக்கு நடுவுல கேசவரம்னு ஒரு அணையை கட்டி அங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு எடுத்திட்டு போயிட்டாங்க. சுற்று சூழல் கெட்டு போகாம இருக்கிறத்துக்காக ஒவ்வொரு நதியிலையும் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஓடுணம்னு ஒரு சட்டமே இருக்கு. அதை எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காம இப்படி திருப்பி விட்டது தான் கூவத்துக்கு ஒரு பெரிய ஆப்பா அமைஞ்சுடுச்சுன்னு சொல்றாங்க!

பச்சையப்பன் கல்லூரி நிறுவனர் திரு பச்சையப்பன் முதலியார் வாழ்க்கையைப்பத்தின ஆவணங்கள்ல கூவம் பத்தி நிறைய செய்தி இருக்கு! தினமும் காலையில் பச்சையப்பன் முதலியார் கூவத்துல குளிச்சுட்டு பக்கத்துல இருக்குற ஆலயத்துல கோயில்ல வழிபடுவார்னு அவரோட டைரிக்குறிப்புகள்ல எழுதியிருக்கு! இப்ப கூட கூவத்துல குளிக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை!! என்ன, குளிச்ச பிறகு அவர் எழுதுன மாதிரி டைரி எழுதறத்துக்கு தான் ஆள் இருக்கமாட்டாங்க!

நம்ம முன்னாடி பாத்த மாதிரி கூவத்துக்கு நீர் வரத்து குறைய ஆரம்பிச்சதிலிருந்து கூவம் டேமேஜ் ஆக ஆரம்பிச்சிடுச்சு! சென்னையோட மக்கள் தொகை 70 லட்சம். இவிங்க அத்தனை பேரோட கழிவு தாங்கியாக கூவம் மாறிடுச்சு!

இன்னைக்கு சென்னையில குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் ஒரு சரியான நதி இல்லாததுதான்றது பலரோட கருத்து! கையில தர்பூசணி வெச்சிகிட்டு செர்ரி பழத்துக்கு அலையுற மாதிரி (அடடடா என்ன உவமை! என்ன உவமை!) கூவத்தை டேமேஜ் பண்ணிட்டு தண்ணிக்காக வீராணம் வரைக்கும் பைப் போடறாங்க! இனிமேலாவது கூவத்தோட பாதைல இருக்கிற ஆக்கிரமுப்புகளை எல்லாம் அகற்றினாலாவது கூவம் ஓரளவுக்கு சரியாகுதான்னு பாப்போம்!


முடிக்கும் போது ஒரு பஞ்சோட முடிக்க வேணாமா! கூவம் ன்ற வார்த்தைக்கு “தூய ஊற்று நீர்”னு அர்த்தமாம்!! என்ன கொடுமை சரவணன் இது!!!